For Daily Alerts
Just In
அடுத்தடுத்து பூச்சி மருந்து குடித்த தம்பதி கவலைக்கிடம்
தேனி: குடும்பத்தகராறு காரணமாக மனைவி பூச்சி மருந்து குடித்ததால் மனமுடைந்த கணவரும் மிச்சமிருந்த பூச்சி மருந்தை குடித்தார். இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த சுகந்தி நேற்று கணவர் எதிரிலேயே விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார்.
இதை பார்த்த கருப்பையாவும் மனம்நொந்து அதே பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனால் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Story first published: Saturday, May 17, 2008, 13:00 [IST]