For Daily Alerts
Just In
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியர் விடுவிப்பு
டெல்லி: தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் முகம்மது நயீம் விடுவிக்கப்பட்டார்.
ஆப்கானில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழிலாளர்கள், பொறியாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் செல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் முகம்மது நயீம் என்ற இந்தியத் தொழிலாளரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். ஹேராட் என்ற இடத்திலிருந்து இவர் கடத்தப்பட்டார்.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்காக இவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி டாக்சியில் போய்க் கொண்டிருந்தபோது நயீமை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவரை விடுவிப்பது தொடர்பாக இந்தியத் தூதரகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் நயீமை, தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர். இதை மத்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
Comments
Story first published: Sunday, May 18, 2008, 12:11 [IST]