For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா ஏற்பு- ஜீதாஜீவனுக்கு பொறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

Poongothai
சென்னை: ஊழல் வழக்கில் உறவினருக்கு சிபாரிசி செய்ததாக வந்த புகாரையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் பூங்கோதை கடிதம் கொடுத்தார். அதை அவர் ஏற்றுக் கொண்டதையடுத்து பூங்கோதைக்கு பதிலாக கீதாஜிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினர் மின்வாரியத் துறை பொறியாளர் ஜவஹர் என்பவரை விடுவிக்க நடவடிக்கை எடு்க்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயாவுக்கு அமைச்சர் பூங்கோதை போனில் தொடர்பு கொண்டு பேசிய டேப்பை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாம் வெளியிட்டார்.

இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் பூங்கோதை கடிதம் அளித்தார். இந்நிலையை அந்த கடிதத்தை ஏற்று கவர்னர் பர்னாலாவுக்கு கருணாநிதி அனுப்பினார். இதையடுத்து அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பூங்கோதைக்கு பதில் புதிய சமூக நலத்துறை அமைச்சராக கீதாஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் வகித்துவந்த கால்நடை துறை, ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X