இதுவும் தொங்கு சட்டசபை தான்-கிருஷ்ணா
பெங்களூர்: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அக் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 110 இடங்கள் மட்டுமே பாஜக வென்றுள்ளது. இதனால் இதுவும் தொங்கு சட்டசபை தான் என அவர் கூறியுள்ளார்.
முன்னாள் கர்நாடக முதல்வரான இவர், தேர்தலை சந்திப்பதற்காக மகாராஷ்டிர கவர்னர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்துக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இவரது தலைமையில் தான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. இந் நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணா, பொறுப்பான எதிர்க் கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்றும், இந்த வெற்றிக்கு பாஜகவை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஜேட்லிக்கு பாஜக பாராட்டு:
இதற்கிடையே கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரச்சாரத்தையும், வேட்பாளர்கள் தேர்வையும் முன்னின்று கையாண்ட மூத்த பாஜக தலைவர் அருண் ஜேட்லிக்கு அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது சிறப்பான திட்டமிடலால் தான் இந்த வெற்றி எளிதானது என்றார்.












Click it and Unblock the Notifications