For Daily Alerts
Just In
கேரளாவுக்கு கடத்தல்-8 டன் ரேஷன் அரிசி பறி்முதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்தனர்.
நெல்லையில் இருந்து ஒரு லாரியில் ஏராளமான ரேஷன் அரிசி நாகர்கோவில் வழியாக கடத்தி செல்லப்படுவதாக நாகர்கோவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் போலீசார் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்த லாரியை போலீசார் மடக்கி சோதனையிட்டனர்.
அதில் 8 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து மூட்டைகளையும், லாரியையும் பறிமுதல் போலீசார் செய்தனர். லாரி டிரைவர் கோட்டார் முருகேசன், நாகர்கோவிலை சேர்ந்த கிளினர் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Story first published: Wednesday, May 28, 2008, 13:51 [IST]