For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமனார் வீட்டில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை

By Staff
Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் அருகே திருமணமான ஒரே மாதத்தில் மாமனார் வீட்டில் புதுமாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வலிவலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பசுபதி (28).

இவருக்கும் திருவாரூர் அருகே மருத்தூரை சேர்ந்த ராமு என்பவரது மகள் இளவரசிக்கும் கடந்த 28 ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மணமகள் உறவினர் வீட்டு விருந்துக்காக மாமனார் வீட்டுக்கு சென்று புதுமாப்பிள்ளை பசுபதி தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று படுக்கை அறைக்குள் சேலையில் தூக்கு போட்ட நிலையில் பசுபதி பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் அங்குவந்து பசுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் புது மாப்பிள்ளை பசுபதியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை மாரியப்பன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X