For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாபிலிருந்து 10000 டன் கோதுமை தமிழகம் வருகை

By Staff
Google Oneindia Tamil News

Wheat
சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக மாதந்தோறும் பஞ்சாபிலிருந்து 10 ஆயிரம் டன் கோதுமையை நேரடியாக வாங்கி, அவற்றை மைதா, ரவையாக மாற்றி ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

பஞ்சாப் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனிடமிருந்து இந்த கோதுமை இறக்குமதி செயய்ப்படும். இதுகுறித்து மாநில உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்ைககளை எடுத்து வருகிறது.

அதில் ஒரு சிறப்புத் திட்டமாக, பஞ்சாப் சிவில் சப்ளைஸ் கழகத்திடமிருந்து மாதந்தோறும் 10 ஆயிரம் டன் கோதுமையை நேரடியாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்த கோதுமையை வாங்கி தமிழகத்தில் உள்ள ஆலைகளில் கொடுத்து மைதா மற்றும் ரவையாக மாற்றி ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கோதுமை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியதால் நேரடியாக கோதுமையை வாங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

விலையேற்றத்தைக் குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா ஆகியவற்றை மாநில அரசு வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார் வேலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X