For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகம்-லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 34 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஹாசன்: கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 34 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.

கொனனூர் என்ற ஊரைச் சேர்ந்த 100 பேர் ஒரு லாரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர். அப்போது அக்ரஹாரா என்ற இடத்தில் வழியில் மின்சார வயர் அறுந்து கிடந்தது.

இதையடுத்து லாரியை டிரைவர் பின் பக்கமாக எடுத்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 3 முறை குட்டிக்கரணம் அடித்து அந்த லாரி குளத்தின் கரையில் விழுந்தது.

இதில் 34 பேர் பலியாயினர். இதில் 25 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த விபத்தல் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X