எஸ்எஸ்எல்சி-புதுச்சேரியில் 79.4% பாஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் 79.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 0.49 சதவீதம் அதிகமாகும்.
கல்வியமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் இன்று இந்த தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், இந்த ஆண்டு மொத்தம் தேர்வெழுதிய 15,512 பேரி்ல் 12,317 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 7,606 மாணவர்களில் 5,801 பேரும், 7,906 மாணவிகளில் 6,516 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
500க்கு 492 மதிப்பெண்கள் பெற்ற ஜெயராஜ், மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார். 490 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவ-மாணவிகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். 489 மதிப்பெண்களுடன் இருவர் 3ம் இடத்தைப் பிடித்தனர்.
12 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மெட்ரிகுலேசன்:
மாநிலத்தில் மொத்தம் 1,253 பேர் மெட்ரிகுலேசன் தேர்வெழுதினர். இதில் 1,225 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதாவது 97.77 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
செயிண்ட் ஜோசப்ஸ் ஆப் க்ளூனி ஸ்கூலைச் சேர்ந்த பீர்த்தி பிலிப் 485 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றார். அதே பள்ளியைச் சேர்ந்த சிந்தி ரவீந்திரா 483 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார் என்றார் ஷாஜகான்.