For Daily Alerts
Just In
கோவை, திருவாரூரில் மத்திய பல்கலைகள்- திருச்சியில் ஐஐஎம்
அதே போல திருச்சியில் நிர்வாக மேலாண்மை கல்விக்கான இந்திய கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்) அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை வந்த அர்ஜூன் சிங், கருணாநிதியை சந்தித்தபோது தமிழகத்தில் 3 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந் நிலையில் டெல்லி திரும்பிய அர்ஜுன்சிங், கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
கோவையில் உலக தரத்திலான மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் மேலாண்மை கல்விக்கான இந்திய கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.), திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவை அமைக்கப்படும்.
இந்த பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு தேர்வு செய்து, அவற்றை இலவசமாக வழங்கிட வேண்டும் என்றும் அர்ஜுன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Story first published: Sunday, June 1, 2008, 10:22 [IST]