For Daily Alerts
Just In
கரூர்: மும்பை ரயிலில் ரூ. 2.5 கோடி ஹெராயின் பறிமுதல்
கரூர்: மும்பை ரயிலில் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதைக் கடத்தில் இரு இலங்கை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் இருந்து வந்த ரயிலில் ஹெராயின் கடத்தப்படுவதாக கரூர் போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
அதன் பேரில் மும்பையில் இருந்து வந்த ரயிலில், கரூர் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட நபரின் பெட்டிகளை போலீசார் சோதனையிட்டபோது ரூ. 2.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது.
இலங்கையை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த நபர் கொடுத்த தகவலின்பேரில் அதே நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments
Story first published: Sunday, June 1, 2008, 10:12 [IST]