For Quick Alerts
For Daily Alerts
Just In
பண வீக்கம் 8.24% ஆக உயர்வு
டெல்லி: நாட்டின் பண வீக்க விகிதம் 8.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண வீக்கம் விரைவில் 9 சதவீதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விலைவாசி தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நாட்டின் பண வீக்க விகிதம் 8.24% ஆக அதிகரித்துள்ளது. மே 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பண வீக்கம் 8.24% ஆக இருந்தது. முந்தைய வாரத்தில் இது 8.10 சதவீதமாக இருந்தது.
வருடாந்திர பண வீக்கி விகிதம் 5.15 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து விலைவாசி உயர்வு இருந்து வருவதால், பண வீக்கம் விரைவில் 9 சதவீதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Friday, June 6, 2008, 13:50 [IST]