'குண்டு பல்பை மாற்று, சி.எப்.எல்லை மாட்டு'-ராமதாஸ்
நேற்று (ஜூன் 5) உலக சுற்றுசுழல் தினத்தையொட்டி சென்னை பசுமை தாயகம் அமைப்பு சார்பில் பூமி வெப்பமடைவதை தடுக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ராமதாஸ் தனது கழுத்தில் "குண்டு பல்பை மாற்று, சி.எப்.எல். விளக்கை மாட்டு'' என்ற வாசகம் அடங்கிய அட்டையை தொங்க விட்டபடி, ஒவ்வொரு கடையாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து உலகம் அழியாமல் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு எரிபொருள் பயன்பாட்டை 2015ம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்று என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் மொத்த மின்சார உற்பத்தியில் 20 சதவீதம் மின் விளக்குகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. வீடுகளிலும், அலுவலகங்களிலும் உள்ள சாதாரண குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, அதற்கு பதில் சி.எப்.எல். பல்புகளை மாட்டினால் 80 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
எனவே அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சி.எப்.எல். பல்புகளைத் தான் பொருத்த வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.