வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்க சைக்கிள்!
சென்னை அருகே உள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம்.
பூங்காவின் பரப்பளவு பெரிது என்பதால் நடந்து பார்ப்பதற்குள் கால் வலித்துக் களைத்துப் போய் விடும். இனால் பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சைக்கிள் சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை சைக்கிளில் சவாரி செய்ய இதன்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதம் விதமான சைக்கிள்கள் இதற்காக வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 சைக்கிள்கள் தற்போது வாங்கப்பட்டுள்ளன.
இந்த சைக்கிள்கள் வழக்கமானவை போல அல்ல. மிகமிக நிதானமான வேகத்தில் மட்டுமே இதில் செல்ல முடியும். இந்த சைக்கிளை வாடகைக்கு எடுக்க ரூ. 500 டெபாசிட் செலுத்த வேண்டும். வாடகைக் கட்டணம் ரூ. 50 ஆகும். ஒருவர் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை இந்த சைக்கிளை வாடகைக்கு எடுக்கலாம். அதற்கு மேல் தேவை என்றால் அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் உள்ளதைப போல நைட் சஃபாரி வசதி இங்கும் ஏற்படுத்தப்படவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.