For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயன் கொலை வழக்கு-சிபிசிஐடிக்கு மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

Vijayan
சென்னை: எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் என்கிற விஜயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன், கோட்டூர்புரத்தில் கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி நாராயணனின் மூத்த மகள் லதா, அவரது கணவர் ராஜேந்திரன், மகன் குமார் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயன் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மாநில டிஜிபி பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் இந்த வழக்கு வேகம் பிடிக்கும், விரைவில் குற்றவாளிகள் யார் என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X