விடுதலை- நளினிக்கு எதிராக சுவாமி வழக்கு
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுவி்க்கக் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந் நிலையில் 17 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
நளினியின் விடுதலையை எதிர்த்து வரும் சுவாமி, இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவி்ல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும். ஆகவே நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார் சுவாமி.
இந்த மனு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
சீனா செல்லும் சுவாமி:
இதற்கிடையே சீன அரசின் சார்பில் நடக்கும் சீன-இந்திய உறவு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சுவாமி பெய்ஜிங் செல்கிறார்.