For Daily Alerts
Just In
சரக்கு ரயில் தடம் புரண்டது-பெட்ரோலிய டேங்கர்கள் கவிழ்ந்தன
திருச்சி: மணப்பாறை அருகே சரக்கு ரயிலின் பெட்ரோலிய எண்ணெய் டேங்கர்கள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால் திருச்சி-மனப்பாறை இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரைக்கு சென்று கொண்டிருந்த அந்த ரயில் சமுத்திரம்-மணப்பாறை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை தடம் புரண்டது. இதில் பெட்ரோலியம் ஏற்றிச் சென்ற 4 டேங்கர்கள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி கவிழ்ந்தன.
அதிலிருந்த பெட்ரோலியம் வழிந்தோடியது.
இச்சம்பவத்தால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கவிழ்ந்த டேங்கர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Comments
Story first published: Wednesday, June 11, 2008, 11:57 [IST]