For Daily Alerts
Just In
மயங்கிய மலேசிய பயணி-நிறுத்தப்பட்ட விமானம்
நேற்றிரவு 10.20 மணிக்கு 214 பயணிகளுடன் அந்த விமானம் கிளம்பியது. ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்த சொக்கலிங்கம் (45) என்ற பயணி மயங்கினார்.
இது குறித்து அவரது மனைவி விமான சிப்பந்திகளிடம் தெரிவிக்கவே, உடனடியாக பைலட்களுக்கு தகவல் தரப்பட்டு விமானம் ரன் வேயிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மீண்டும் விமானத்தை டேக்ஸி வே பகுதிக்கு கொண்டு வந்தனர் விமானிகள். விமான நிலைய டாக்டர்கள் விரைந்து வந்து சொக்கலிங்கத்துக்கு முதலுதவி செய்து விமானத்திலிருந்து இறக்கினர்.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த விமானம் இரவு 11.10 மணிக்கு மீண்டும் கிளம்பி மலேசியா சென்றது.
சொக்கலிங்கம் மலேசியாவைச் சேர்ந்த தமிழராவார். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
Comments
Story first published: Friday, June 13, 2008, 11:54 [IST]