மேட்டூர் அணை திறப்பு - 11 மாவட்டங்கள் பயன் பெறும்
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகள் பலனடையும்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால், குறித்த காலத்தில் அணையைத் திறக்க உத்தரவிட வேண்டும் என விவசாயகள் கோரிக்ைக எழுப்பினர். இதை ஏற்று ஜூன்12ம் தேதியன்று அணையைத் திறக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அதன்படி வியாழக்கிழமை மாலை அணை திறக்கப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தண்ணீரைத் திறந்து விட்டு, மலர்களைத் தூவினார்.
தற்போது விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இது பின்னர் படிப்படியாக உயர்த்தப் பட்டு ஜூலை முதல் வாரத் தில் 15 ஆயிரம் கனஅடி நீராக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.