1000 ரூபாய்க்கு கூலிபடையாக மாறிய ஊமை வாலிபர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெறும் ஆயிரம் ரூபாயக்காக ஒரு வாய் பேச முடியாத வாலிபர் கூலிப் படையாக மாறி காவலாளி ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள மிட்டாய் நிறுவன காவலாளி சுடலை 2 வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ரஞ்சித் குமார், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது,
சுடலை வேலை பார்த்து வந்த நிறுவனம் அருகில் பழனிசாமி என்பவர் கடை வைத்துள்ளார். அந்த கடைக்கு அடிக்கடி வரும் சுடலை பழனிச்சாமியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பழனிசாமி, வாய்பேச முடியாத தனது நண்பரான ரஞ்சித் குமாரிடம் கூலியாக ரூ. 1,000 கொடுத்து சுடலையை கொலை செய்ய கூறியுள்ளார்.
இதையடுத்து குடிபோதையில் சென்ற ரஞ்சித் குமார் தூங்கிக் கொண்டிருந்த சுடலையின் தலையில் சம்மட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
வெறும் ஆயிரம் ரூபாயாக்காக ஒரு வாய் பேச முடியாத வாலிபர் கூலிப் படையாக மாறி காவலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.