For Daily Alerts
Just In
விமானத்தில் திடீர் கோளாறு-தப்பினர் ரோஜா, பயணிகள்
திருப்பதி: நடிகையும், தெலுங்குதேச மகளிர் அணித் தலைவியுமான ரோஜா பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் திருப்பதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இந்தியன் விமானம் ஒன்று 144 பேருடன் ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு நேற்று சென்றது. அதில், நடிகை ரோஜா, உள்ளூர் தெலுங்கு தேச தலைவர் எர்ரபள்ளி தயாகர ராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் கருணாகர ரெட்டி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. இதனால் விமானம் தடுமாறியது, கரும்புகையும் அதிக அளவில் வெளியானது.
இதனால் விமானத்திற்குள் இருந்தவர்கள் பதட்டமடைந்தனர். உடனடியாக விமானி அருகிலிருந்த திருப்பதிக்கு விமானத்தை திருப்பினார். பலத்த பாதுகாப்புடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்தே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரோஜா பதட்டத்துடன் கூறுகையில், டமார் என்று பெரும் சப்தம் கேட்டது. வெடி விபத்து போல அது இருந்தது. காதே செவிடாகி விடும் அளவுக்கு சத்தம் பயங்கரமாக இருந்தது.
ஜன்னல் வழியாக பார்த்த போது, தரைப்பகுதியில் மக்கள் பீதியில் ஓடுவதை பார்த்தேன். ஆனால் இது சாதாரண கோளாறுதான் என்று விமான அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.
Comments
Story first published: Monday, June 16, 2008, 12:46 [IST]