எம்.கே.நாராயணன், எஸ்.எஸ். மேனன், பாதுகாப்பு செயலர் திடீர் இலங்கை பயணம்
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
முதலில் இலங்கை பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த அவர்கள் பின்னர் ராஜபக்சேவை சந்தித்தனர்.
புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றைய சந்திப்பி்ன்போது அந்த பேச்சுவார்த்தை குறித்தும், சீனா-பாகி்ஸ்தானிடம் இலங்கை ஆயுதங்கள் வாங்கி வருவது குறித்த இந்தியாவின் கவலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் கொழும்பில் நடைபெறவுள்ள 15வது சார்க் மாநாடு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
கடந்த வாரம் இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா டெல்லி வந்திருந்தார். பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.