For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூதாட்டியை இறந்ததாக பதிவு செய்த அதிகாரி!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே உயிரோடு உள்ள மூதாட்டி ஒருவரை இறந்ததாக பதிவு செய்துள்ளார் ஒரு அரசு அதிகாரி.

மதுரை அருகே உள்ள ஆலங்குடியை சேர்ந்தவர் வேலன். இவரது மனைவி நாகம்மாள் (72).

கணவர் இறந்து விட்டதால், ஆதரவற்ற நிலையில், முதியோர் திட்டம் மூலம் கடந்த 2000 ஆண்டு முதல் மாதம் தோறும் உதவி தொகையாக ரூ 400 பெற்று வந்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இவருக்கு வர வேண்டிய பென்ஷன் வரவில்லை. இதனால் தனக்கு வரவேண்டிய பென்ஷன் கோரி மாவட்ட கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்தார்.

ஆனால் விசாரணையில் அந்த மூதாட்டி இறந்து விட்டதாக அரசு அதிகாரிகள் அலட்சியமாக பதிவு செய்தது தெரிய வந்தது. அதனால் பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.

ஒரு அப்பாவி ஏழை மூதாட்டிக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகை அலட்சியத்துடன் செயல்பட்ட அரசு அதிகாரி மூலம் பறிபோயுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X