For Quick Alerts
For Daily Alerts
Just In
செங்கோட்டை: யானை மிதித்து தொழிலாளி பலி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே ஒரு கூலித் தொழிலாளியை யானை மிதித்துக் கொன்றது.
செங்கோட்டை அருகே மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சாமி என்பவர் மகன் துரையப்பா. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் 20 தொழிலாளர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையி்ல் உள்ள கண்ணுபுளிமேடு என்ற பகுதிக்கு ஈத்தல் என்ற ஒருவகை புற்களை வெட்டுவதற்காக சென்றார். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதையறியாத தொழிலாளர்கள் அனைவரும் மாலை அங்கு புற்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவர்களை யானை ஒன்று விரட்டியது. இதில் துரையப்பா மட்டும் யானையிடம் சிக்கி கொண்டார். யானை மிதித்ததில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Saturday, June 21, 2008, 12:05 [IST]