'ராஜ் நியூஸ்' செய்தி சேனல்: தொடங்கி வைத்தார் கருணாநிதி
சென்னை: ராஜ் டிவியின் 24 மணி நேர செய்தி சேனலான ராஜ் நியூஸ் 24x7-ஐ முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
ராஜ் டிவி குழுமத்திலிருந்து புதிதாக ராஜ் நியூஸ் 24x7 என்கிற செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி புதிய செய்தி சேனலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜ் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், இயக்குநர் ரவீந்திரன் பேசுகையில், இந்த செய்தி சேனலில், 24 மணி நேரமும் செய்திகள், வர்த்தக செய்திகள் உள்ளிட்டவை ஒளிபரபபாகும்.
பங்கு சந்தை நிலவவரம், நாட்டு நடப்பு, சுகாதாரம், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, சாதனையாளர்கள் குறித்த செய்தி, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
பங்குச் சந்தை நிலவரங்களை நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.
ஹல்லோ சந்தை, சந்தை நேரம் ஆகிய இரு நிகழ்ச்சிகள், பங்குச் சந்தை தொடர்பாக ஒளிபரப்பாகும்.
இதுதவிர, ராஜ் வணிக உலகம் என்ற வாராந்திர வர்த்தக நிகழ்ச்சியும் இடம்பெறும். ராஜ் நியூஸ் சேனல், கட்டணமில்லா சேனலாகும்.
தெலுங்கிலும் இதே போன்றதொரு 24 மணி நேர சேனலை தொடங்கவுள்ளோம் என்று தெரிவித்தனர்.