சிவாஜி பிறந்த நாளில் புதிய கட்சி: நடிகர் பிரபு
சேலம்: நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதியன்று அரசியில் பிரவேசம் நடைபெறும் என நடிகர் பிரபு கூறியுள்ளார்.சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறஉகையில், சேலத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. எனது தந்தை ஏழு வயதில் சேலத்தில் தான் முதன் முதலில் நாடக நடிகர் ஆனார்.
எனது தந்தை மேல் உயிராக உள்ள ரசிகர்களுக்காகவும், ஏழை மக்களுக்காக உதவி செய்யவும் சிவாஜி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு வருடமும் 100 ஏழை மாணவர்களின் படிப்பு செலவை ஏற்று உதவி வருகிறோம்.
னது மகன் விக்ரம் நடிப்பதை விட இயக்குவதில் தான் ஆர்வமாக உள்ளார்.எனவே தான் பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்த்தனிடம் உதவி இயக்குனாராக சேர்ந்துள்ளார்.
எனக்கும் ரசிகர்களுக்கும் இடையே இடைவெளி இருப்பது உண்மைதான். நான் தற்போது நல்ல படங்களில் மட்டும் நடித்து வருகிறேன்.
நடிகர் விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் ஆகியோர் கட்சி ஆரம்பித்து விட்டனர். நீங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லையா என பலர் கேட்கின்றனர். நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதி அன்று அரசியில் பிரவேசம் குறித்து அறிவிக்கலாம் என இருக்கிறேன் என்றார் பிரபு.
அரசியல் பிரவேசம் குறித்து பிரபு தெரிவித்துள்ள இந்தக் கருத்து சிவாஜி மற்றும் பிரபு ரசிகர்களிடையே உற்சாகத்ைத ஏற்படுத்தியுள்ளது.