For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் டிவி மீது கமிஷனர் ஜாங்கிட் மான நஷ்ட வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

Jangid
சென்னை: தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டு வரும் மக்கள் டிவி, ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரியும், அந்த செய்தியை தடை செய்யக் கோரியும் சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் தொலைக்காட்சியில், கடந்த அக்டோபர் மாதம் முதல் என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக உள்ள புஷ்பராஜ், ஜெயசங்கர், பாஸ்கரன், மாரியப்பன் ஆகியோரே காரணம்.

நானும், முன்னாள் கலெக்டரும் ேசர்ந்து அரசு நிலத்ைத பினாமி பெயரில் ஆக்கிரமித்திருப்பதாக செய்திவெளியிட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் வட நெமிலியில்எனக்கு நிலம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது எதுவுமே உண்மை இல்லை. எனக்கு அங்கு நிலமும் கிடையாது. நான் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவும் இல்லை.

எனது நன்மதிப்பை களங்கப்படுத்தும் வகையில் இந்த அவதூறு செய்தி ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் தொலைக்காட்சியும், மேற்கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ரூ.10 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த அவதூறுச் செய்தியையும் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜாங்கிட்.

இந்த மனு நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த அவர் ஜூலை 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதற்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மக்கள் டிவிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X