பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு: சேலம் மாணவி முதலிடம்
சென்னை: பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாணவி ரெஹானா ராஜேந்திரன் முதலிடம் பிடித்தார்.
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி, மேல்முகம், கொட்டப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ரெஹானா ராஜேந்திரன் முதலிடத்ைதப் பிடித்தார்.
2வது இடத்தை ஈரோடு மாவட்டம் மனோஜ்குமார், 3வது ரேங்க்கை செங்கல்பட்டு மாணவர் அருண், 4வது ரேங்க்கை பர்கூர் திணேஷ், 5வது ரேங்க்கை கும்பகோணம் வெங்கடேஷ், 6வது ரேங்க்கை சென்னை மணப்பாக்கம் பல்லவி, 7வது ரேங்க்கை சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி ஆஷா கணேசன், 8வது ரேங்க்கை திருநெல்வேலி விக்னேஷ், 9வது ரேங்க்கை புதுக்கோட்டை மனோஜ்குமார் பெற்றனர்.
கவுன்சிலிங்:
பி.இ கவுன்சிலிங் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. அன்று விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். 4ம் தேதி உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. வெளி மாநில மாணவர்களுக்கு 9ம் தேதி நடைபெறும்.
பொது கவுன்சிலிங் ஜூலை 11ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும்.
1 லட்சத்து 23 ஆயிரத்து 875 மாணவ, மாணவியர் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.