For Daily Alerts
Just In
அமெரிக்கா- 5 பேரை சுட்டுக் கொன்று தொழிலாளி தற்கொலை
நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்தது. தனது மூத்த அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெஸ்லி ஹிக்டெளன் என்ற ஊழியரை பிற ஊழியர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேற்றினர்.
சிறிது நேரத்தில் செமி-ஆட்டோமேட்டிக் .45 கேலிபர் துப்பாக்கியுடன் தொழிற்சாலைக்குத் திரும்பிய வெஸ்லி தனது அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு மேலும் 5 பேரையும் சுட்டார். இதில் 5 பேர் பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
பின்னர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக இந்தக் கொலைகளை செய்யப் போவதாக தனது கேர்ள் பிரண்டுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் வெஸ்லி. இதை அவர் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்காததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, June 26, 2008, 11:37 [IST]