For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணத்தை ஐ.டி. நகராக மாற்றுவேன்: மணிசங்கர் அய்யர்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோண்ம்: கும்பகோணம் நகரத்தை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றுவேன் என்று மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அய்யர் அங்கு பேசுகையில், நமது நாட்டில் கல்வி, சுகாதாரம் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

நாடு முன்னேற வேண்டும் எனில் அந்த நாட்டின் அனைத்து பகுதிகளும் முன்னேற வேண்டும். அதை தான் மத்திய அரசு சி்றப்பு கவனம் செலுத்தி செய்து வருகிறது.

கணித மேதை ராமானுஜம், வலங்கைமான் சீனிவாச சாஸ்திரி போன்றோர் கல்வி பயின்ற இந்த நகரம் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும்.

நமது பகுதிகளில் பிபிஓ மற்றும் கால் சென்டர்கள் பல உருவாக வேண்டும்.

கல்வி மற்றும் அறிவு சார்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். ஆனால் அதற்கு ஏற்ப வளர்ச்சி தான் இல்லை.

உலகில் பல்வேறு இடங்களில் உள்ள இந்த நகரத்தை சேர்ந்த பழைய மாணவர்களை தேடிப் பிடித்து அவர்கள் மூலம் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்த சமூகமாக இந்த நகரத்தை மாற்ற வேண்டும். அதற்கு நான் பாடுபடுவேன் என்றார் அய்யர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X