துரியன் பழத்திற்கு ரிசர்வேஷன்: நீலகிரியில் அலைமோதும் மக்கள்
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே பர்லியார் பழ தோட்டப் பண்ணை உள்ளது.
இங்கு மலேசிய நாட்டில் இருந்து கொண்டு வந்து வளர்க்கப்பட்ட துரியன் பழ மரங்கள் 33 வளந்து வருகிறது.
இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் துரியன் பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, உடனே குழந்தை பாக்கியம் கிடைத்து விடுவதாக நம்பிக்கை உள்ளது.
ஒரு மரத்தில் இருந்து சுமார் 50 முதல் 100 பழங்கள் வரை கிடைக்கும்.
கடந்த ஆண்டு 1,351 கிலோ துரியன் பழம் விற்பனை மூலம் அரசுக்கு ரூ 3 லட்சத்து 10 ஆயிரத்து 822 வருமானமாக கிடைத்துள்ளதாக பண்ணை மேலாளர் சிவராஜ் தெரிவித்துள்ளனர்.
இந்த பழம் ஒரு கிலோ ரூ 230 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சீசனில் 1,200 கிலோ பழங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதையடுத்து பழங்களைப் பெற முன்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.