For Daily Alerts
Just In
ஹெலிகாப்டர் விபத்து: இரு அமைச்சர்கள் பலி
கவுதமாலா சிட்டி: கவுதமாலாவில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு அமைச்சர்கள் இருவர் பலியாகினர்.
கவுதமாலா நாட்டு உள்துறை அமைச்சர் வினிகோ கோமஸ் மற்றும் துணை அமைச்சர் எட்கார் ஹெர்னான்டஸ் உள்ளிட்ட 4 பேர் அந்நாட்டின் வடக்கு பீட்டன் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.
புருள்ஹா என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
இதில் அமைச்சர்கள் இருவர் மற்றும் அவர்களோடு பயணம் செய்த இருவர் என நால்வரும் பலியாகினர்.
இத்தகவலை கவுதமாலா அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Monday, June 30, 2008, 12:17 [IST]