'அணு சக்தி ஒப்பந்ததிற்காக எவ்வித தியாகத்திற்கும் காங். தயார்'
பாட்னா: அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவித தியாகத்தை செய்வதற்கும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கிருபாநாத் பாதக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவின் நலனுக்கு மிகவும் அவசியம். எனவே இடதுசாரிகள் இதில்முரண்டு பிடிக்கக்கூடாது. எதிர்கால மின்சாரத் தேவையை அணு சக்தி ஒப்பந்தத்தால்தான் பூர்த்தி செய்ய முடியும்.
மின்சார உற்பத்தியில், வல்லரசு நாடுகளின் உதவியில்லாமல் எந்தநாடும் தன்னிறைவை அடைய முடியாது. எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த ஒப்பந்தத்திலிருந்து அரசு பின் வாங்கக் கூடாது.
நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் காங்கிரஸ் எப்போதும் செயல்படுகிறு. எனவே அணு சக்தி ஒப்பந்த விவகாரத்திலும், எந்தவித தியாகத்திற்கும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார் அவர்.