கரூர் திமுக மா.செ. வாசுகி முருகேசன் படிப்பு குறித்து சர்ச்சை
கரூர்: கோவை அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், வக்கீல் படிப்பில் சேர்ந்த கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் ஒரே ஒரு நாள் மட்டுமே வகுப்புக்கு வந்துள்ளார். எனவே அவர் அடுத்த ஆண்டு படிப்புக்கு தகுதி பெற்றாரா அல்லது பெயில் ஆகியுள்ளாரா என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.
கரூர் திமுக மாவட்ட செயலாளராக இருபவர் வாசுகி முருகேசன். கரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு ஒரு முறை வெற்றியும், இரண்டு முறை தோல்வியும் அடைந்துள்ளார்.
கோவையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்ட கல்லூரி பிளஸ் டூ முடித்தவர்களுக்கு 5 வருட படிப்பும், டிகிரி படித்தவர்களுக்கு மூன்று வருட படிப்பும் பயிற்றுவித்து வருகிறது.
இந்த கல்லூரியில் 2007 - 2008 ம் கல்வி ஆண்டில் ரெகுலர் வகுப்பில் வாசுகி முருகேசன் சேர்ந்தார். ஆனால் முதல் நாள் மட்டும் வகுப்புக்கு வந்து விட்டு பிறகு வகுப்புக்கு தொடர்ந்து வரவில்லை என்று கூறப்படுகிறது. முதலாமாண்டு தேர்வு முடிந்து பலர் இரண்டாம் ஆண்டு கல்வி பயில செல்ல உள்ளனர்.
இந்த நிலையில், வகுப்புக்கே போகாத கரூர் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன் பாஸா, பெயிலா என்று தெரியவில்லை.
அங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவர்கள் மொத்தம் 32 பேருக்கு மீண்டும் முதலாம் ஆண்டு படிக்க வேண்டும் (ரீபீட்) என்று கல்லூரி நிர்வாகம் குறிப்பிடபட்டுள்ளதாக அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களில் வாசுகியின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.