கற்பழிக்க முயற்சி-சிறுமியை பீரோவில் அடைத்த வாலிபர்கள்
டெல்லி: 13 வயது சிறுமியை, பீரோவில் அடைத்து வைத்து கற்பழிக்க முயன்ற 2 இளைஞர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்வேதா. 13 வயது சிறுமியான இவர் சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், சிறுமி காணாமல் போன 3 நாட்கள் கழித்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர்.
வீட்டுக்குள் யாரும் இல்லை. ஆனால் அழுகுரல் மட்டும் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து ஒரு அறையில்உள்ள பீரோவிலிருந்து சத்தம் வருவதைப் பார்த்த மக்கள் அந்த பீரோவைத் திறக்க முயன்றனர். ஆனால் அது பூட்டியிருந்தது. இதையடுத்து அதை உடைத்துத் திறந்தனர்.
உள்ளே பார்த்தபோது சிறுமி ஷ்வேதா கை, கால் மடங்கிய நிலையில் உள்ளே அடைபட்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தமக்கள் போலீஸுக்குப் புகார் கூறினர்.
போலீஸார் ஷ்வேதாவிடம் விசாரித்தபோது, அதே தெருவைச் சேர்ந்த சந்தீப், யஷ் சர்மா ஆகியோர் தன்னை கடத்திக் கொண்டு இங்கு வைத்து கற்பழிக்க முயன்று வருவதாகவும், வெளியே போய் விடாமல் இருக்க பீரோவுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும் அழுதபடி கூறினார்.
ஷ்வேதா தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.