செப்டம்பர் மாதம் முதல் மாநில மாநாடு: கார்த்திக்
மதுரை: அகில இந்திய நாடாளும் கட்சியின் முதல் மாநில மாநாடு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய நாடளும் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் மதுரையில் வெளியிட்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜூலை 8 ம் தேதியன்று எங்கள் கட்சியை பதிவு செய்ய டெல்லி செல்ல உள்ளேன்.
அதே வேளையில் 10 ம் தேதி முதல் மதுரையில் மூன்று நாட்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளேன்.
பிறகு இரு மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். அப்போது கட்சியின் கொள்கை, மக்கள் பிரச்சனைகளை மக்களிடம் விளக்க திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பாராளுமன்றத்திற்கு கட்டாயம் தேர்தல் வரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
எனது கட்சி தேர்தலின் போது யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை வெள்ளிக்கிழமை தெரிவிப்பேன் .
பிற கட்சியில் நடைபெறும் தவறுகள் எங்கள் கட்சியில் நடக்காமல் இருக்கும் வகையில் கவனமாக உள்ளோம் என்றார் கார்த்திக்.