For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா-அரசு அலுவலகங்களில் தொழுகை கட்டாயம்!

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் அலுவலகத்தில் கட்டாயம் தொழுகை செய்ய வேண்டும் என, மலேசியாவின் கெலன்டன் மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விதிமுறையை பின்பற்றத் தேவையில்லை. ஆனால், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 தடவை தொழுகை நடத்துவதும் அவசியம் என்று அந்த அரசு உத்தரவு கூறுகிறது.

அலுவலகத்தில் அல்லாவை நினைத்து தொழுகையில் மனம் தூய்மை பெறுகிறது. இதனால் அலுவலகங்களில் ஊழல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட மனம் இடம் கொடுக்காது. ஆனால், அல்லாவை தொழுகை செய்யாதவர்கள் அச்சமின்றி ஊழலில் ஈடுபடுவர்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அரசு அலுவலகங்களில் தொழுகையை கட்டாயப்படுத்தியுள்ளதாக, கெலன்டன் மாநில அரசு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X