For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் 2-வது வாரம் குற்றாலத்தில் சாரல் விழா

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: குற்றாலம் சாரல் விழா ஆகஸ்ட் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கோ. சீனிவாசன் தெரிவித்தார்.

சாரல் விழாவிற்கான முன்னோடிக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆட்சியர் மேலும் பேசியதாவது:

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குற்றாலம் சாரல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், தென்னக கலை பண்பாட்டு மையம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் கலை நிகழ்ச்சிகளை நடத்த சிறந்த கலைஞர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட துறையினர் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த ஆண்டு கால்நடைத் துறை மூலம் நாய்கள் கண்காட்சியும் நடத்தப்படும். மேலும், செஸ் போட்டி, பெண்களுக்கான இந்திய கலாசார ஆடை அலங்காரப் போட்டியும் நடத்தப்பட உள்ளது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X