இது பாஜகவின் சதி-முலாயம், அத்வானியின் டிராமா-லாலு
டெல்லி: சுமார் ரூ. 1 கோடி பணக் கட்டுகளை மக்களவையில் கொட்டிய மத்திய பிரதேச பாஜக எம்பி அசோக் ஆக்ராலிடம் உண்மை கண்டறியும் சோதனை (Narco-analysis) நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நம்பிக்கைத் தீர்மானத்தில் நாங்கள் வெல்லப் போகிறோம் என்பது தெரிந்தவுடன் கடைசி நேரத்தில் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆக்ராலிடம் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்த வேண்டும்.
இது அத்வானி தலைமையில் நடத்தப்பட்ட, திட்டமிட்ட முழு டிராமா என்றார்.
மேலும் இது பாஜக நடத்தியுள்ள டிராமா என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அக் கட்சி கூறியுள்ளது.
முலாயம் மறுப்பு:
இந்தப் பணத்துக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தரப்புக்கு தோல்வி உறுதியாகிவிட்டதால், இந்த நாடகத்தை பாஜக நடத்துகிறது.
இதன் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications