For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நேபாள ஜனாதிபதி ஆனார்!

By Staff
Google Oneindia Tamil News

Ram Baran Yadav
காத்மாண்டு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம் பரன் யாதவ், நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதியை தேர்வு செய்ய அங்கு தேர்தல் நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் ராம் பரன் யாதவ் நிறுத்தப்பட்டார். மாவோயிஸ்ட் கட்சி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

இந்தத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முதலில் அறிவித்திருந்த மாதேஸி கட்சி திடீரென பின்வாங்கி, ேநபாள காங்கிரஸ் வேட்பாளரான யாதவுக்கு வாக்களித்தது.இதனால் அவர் அதிக வாக்குகள் பெற்றார். 2வது இடத்திற்கு மாவோயிஸ்ட் வேட்பாளர் சென்றார்.

இருப்பினும் ராம் பரன் யாதவுக்கு வெற்றிக்குத் ேதவையான வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மறு வாக்குப் பதிவு நடந்தது. இதில் 308 வாக்குகளைப் பெற்று ராம் பரன் யாதவ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து நேபாளத்தின் முதல் ஜனாதிபதியாக தேர்வானார் ராம் பரன் யாதவ்.

ராம்பரன் இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர். கொல்கத்தாவில் மருத்துவம் பயின்றார். டாக்டராகப் பணியாற்றி வந்த அவர் பின்னர் நேபாளகாங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் சார்பில் 3 முறை எம்.பியாக பதவி வகித்துள்ளார்.

நாளை ராம் பரன் யாதவ் நேபாளத்தின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அதிபர் ராம்பரன் யாதவுக்கு நேபாள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவியேற்பை தொடர்ந்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா பயன்படுத்திய கருப்பு நிற லிமோசின் காரில் அதிபர் யாதவ் பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர, மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள ஷீத்தல் நிவாஸ் என்ற தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு செல்கிறார்.

அதிபருக்கு ஆயிரம் ராணுவ வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X