சோம்நாத்துடன் பிரதமர்-அமைச்சர்கள் சந்திப்பு
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள லோக்சபா சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
கட்சி உத்தரவுப்படி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யாததற்காக சோம்நாத்சாட்டர்ஜியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சிபிஎம் பொலிட்பீரோ நீக்கியது.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களான சைபுதீன் ஜோஸ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் சோம்நாத் சாட்டர்ஜியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஜோஸ் கூறுகையில், சோம்நாத் சாட்டர்ஜி மிகுந்த வருத்தத்துடன்உள்ளார். அவர்ஒரு மிகச் சிறந்த மனிதர். பழுத்த அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர்.
மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்தோம். கட்சி நடவடிக்கை குறித்து அவரிடம் பேசவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் என்றார்.
சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் சோம்நாத்தை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.