ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்-32 கட்டடங்கள் இடிந்து 110 பேர் காயம்
ஜப்பானின் இஷினோசிகி மலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 40 வினாடிகள் நீடித்து பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் பரப்பியது.
மேலும் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே முடங்கின. இதில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்றும் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு டோக்கியோவிலும் உணரப்பட்டது.
நிலத்தின் அடியில் 120 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்து.
இந்த நிலநடுக்கத்தால் ஹாசிநோகே என்ற இடத்தி்ல் ஒரு கட்டடத்தில் எரிவாயு குழாய்கள் உடைந்து தீ விபத்து ஏற்பட்டது. மேலும் இப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கட்டடங்களும் இடிந்தன.
சில இடங்களில் நிலச்சரி ஏற்பட்டு சாலைகளும் பெயர்ந்தன.