For Quick Alerts
For Daily Alerts
Just In
இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு-15 பேர் பலி
இஸ்தானிபுல்லின் குன்கோரன் பகுதியில் விமான நிலையத்தின் அருகே உள்ள முக்கியமான ஷாப்பிங் பகுதியில் நேற்றிரவு அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இது தீவிரவாதத் தாக்குதல் என அந் நாடு அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
துருக்கியின் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக உள்ள இன்றைய சூழலில் அங்கு மீண்டும் தீவிரவாதம் தலை தூக்கியிருப்பது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
Comments
Story first published: Monday, July 28, 2008, 11:38 [IST]