For Quick Alerts
For Daily Alerts
Just In
சேலம் சிப்காட்டில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
சேலம்: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சேலம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது.
கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது (22), முன்னா (22) உள்பட சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கி முகமதும் முன்னாவும் பரிதாகமாக இறந்தனர். மேலும் 4 பேர் மயங்கிக் கிடந்தனர். இதை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள், 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, July 30, 2008, 17:16 [IST]