For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரகாஷ் ஆம்தே-மந்தாகினிக்கு ரமோன் மகேசேஸே விருது

By Staff
Google Oneindia Tamil News

Prakash and Mandakini
மணிலா: மகாராஷ்டிரத்தில் பழங்குடி இன மக்களுக்காக பள்ளி, மருத்துவமனை நடத்தி வரும் பிரகாஷ் ஆம்தே-மந்தாகினி ஆம்தே தம்பதிக்கு இந்த ஆண்டுக்கான ரமோன் மகேசேஸே விருது வழங்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப் பெரிய விருதாகும்.

குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பாபா ஆம்தேவின் மகன் தான் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான அறிவிப்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று வெளியானது.

கிழக்கு மகாராஷ்டிரத்தி்ல் மடியா கோண்ட் எனப்படும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக இந்தத் தம்பதி பாடுபட்டு வருகிறது.

மருத்துவரான பிரகாஷ், தனது மேல்படிப்பில் இருந்தபோது அவரை தந்தை ஆம்தே அழைத்து மடியா கோண்ட் பழங்குடியினரின் நிலையை விளக்கி, அவர்களது முன்னேற்றத்துக்காக உழைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மும்பையில் தனது டாக்டர் தொழிலை கைவிட்டுவிட்டு கிழக்கு மகாராஷ்டிரத்தின் மலைப் பகுதியில் பழங்குடியினருடன் வாழ ஆரம்பித்தனர் பிரகாசும் அவரது மனைவி மந்தாகினியும்.

அவர்களது ஒப்பில்லாத பணிக்காகத இப்போது இந்த சர்வதேச விருதை வென்றுள்ளனர்.

இவர்கள் தவிர இலங்கையைச் சேர்ந்த ஆனந்த கல்லாபட்டி, இந்தோனேசியாவைச் சேர்ந்த அகமத் மாரிப், தாய்லாந்தைச் சேர்ந்த தெர்ட்சாய், பிலிப்பைன்சின் மாகாண கவர்னரான கிரேஸ், ஜப்பானிய பத்திரிக்கையாளர் அகியோ இஷி உள்ளிட்ட 8 பேரும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X