கடத்தல்: அரசியலில் இதெல்லாம் சகஜம்-அமைச்சர் ராஜா
ஈரோடு: அரசியலில் இதெல்லாம் (கட்டப் பஞ்சாயத்து புகார்) சகஜம். நாட்டில் எங்கெங்கோ குண்டு வெடிக்கிறது. அதை விட்டு விட்டு என் மீதான வழக்கை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன என்று கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், தாக்குதல் புகாருக்குள்ளாகியுள்ள கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா காட்டமாக கூறியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி தம்பதியினருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் பரம்பரை நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கட்டப்பஞ்சாயத்து செய்தும், ஆட்களை வைத்து அவர்களை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்தாகவும் அமைச்சர் ராஜா மீது புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பழனிச்சாமி தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு அமைச்சருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தன் மீதான புகார் குறித்து அமைச்சர் ராஜா நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். நான் எட்டு நாட்களாக ஊரிலேயே இல்லை. வெளியூர் போயிருந்தேன். நேற்றுதான் வந்தேன். நான் ஒரு அமைச்சர். தனியாக போய் எதையும் செய்ய முடியாது. என்னுடன் போலீஸார் இருப்பார்கள்.
இந்த வழக்கு குறித்து கட்சித் தலைமைக்குத் தெரியும். காலையில் கூட அமைச்சர் ஆற்காடு வீராசாமி போனில் பேசினார். சம்பந்தப்பட்ட பெண்மணியை நான் பார்த்ததே இல்லை என்று கூறி விட்டேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது பெயரை யாரேனும் பயன்படுத்தியிருக்கலாம். எனது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. என்னை யாரும் எதுவும் செய்து விட மாட்டார்கள். எனக்கு நோட்டீஸ் வரவில்லை. வந்தால் பதிலளிப்பேன்.
நாட்டில் எங்கெங்கோ குண்டு வெடிக்கிறது. அதை விட்டு விட்டு என் மேல் போடப்பட்ட வழக்கு குறித்து டிவிகளும், பத்திரிகைகளும் செய்தி வெளியிடுகின்றன என்றார் ராஜா.
-
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்! -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்!












Click it and Unblock the Notifications