For Quick Alerts
For Daily Alerts
Just In
அரியலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி 4 பேர் பலி
ஜெயம்கொண்டம்: அரியலூர் மாவட்டம் வல்லம் மற்றும் செந்துறை பகுதியில், குளத்தில் மூழ்கி நான்கு பேர் பலியானார்கள்.
வல்லம் அருகே உள்ள குளத்தில், மீன் பிடித்துக் கொண்டிருந்த அருளானந்தபுரத்தைச் ேசர்ந்த மீனவர் லாரன்ஸ் (40) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் சரவண பாபு அதே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கினான். அவனைக் காப்பாற்றச் சென்ற உறவுக்காரப் பெண் ரஜினா தேவி (24) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சரவண பாபு அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டான்.
செந்துறை பகுதியில் உள்ளகுளத்தில் மூழ்கி சந்துரு (9), அவனது ஏழு வயது தங்கை சத்யா ஆகியோர் உயிரிழந்தனர்.
Comments
Story first published: Sunday, August 3, 2008, 12:37 [IST]