For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூரைப் பிரித்து திருப்பத்தூரை மாவட்டமாக்க பாமக கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூரை இரண்டாகப் பிரித்து, திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

வேலூரில் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜி.கே.மணி பேசுகையில், மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்காக போராடுகிற ஒரே கட்சி பாமகதான். பாமக ஆதரவு இல்லாமல் வேலூர் மாவட்டத்தில் எந்த ஒரு தொகுதியிலும் யாரும் வெற்றிப்பெற முடியாது.

பாமகவை அழிக்க வேண்டுமென்று நினைக் கிறார்கள். எந்நாளும் அது நடக்காது.

வருகிற 23ந் தேதி பாமக மகளிரணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு வேலூரில் நடக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டுமென்று கோரியதாலும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய தாலும் திமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற்றப்பட்டது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலூர் மாவட்டம் 150 கி.மீ. பரப்பளவுடன் பெரிய மாவட்டமாக உள்ளது. இதனை இரண்டாக பிரிக்க வேண்டும். திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதை ஏற்கனவே அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதை உடனே அறிவிக்க வேண்டும்.

அதேபோல தஞ்சாவூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றார் மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X