ரயிலில் ரூ.2.5 கோடி ஓபியம் கடத்தியவர் கைது
ஈரோடு: ஈரோடு அருகே ரயிலில் போதை பொருள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஓபியம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த ரயிலில் ஏறி சோதனை செய்தனர்.
ரயில் ஈரோடு அருகே வந்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஓபியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தயிர்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இலங்கைக்கு போதைப் பொருளை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.