சென்னையில் இன்னொரு விடுதலைப் புலி கைது
சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழ்கட்டளை பஸ் நிலையத்தில் இவரை க்யூ பிராஞ்ச் போலீசார் நேற்றிரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் செல்வகுமார் (31).
இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த அவரிடமிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் செல்போன்கள் மூலம் மோட்டர்களை இயக்க உதவும் சுவிட்சுகள், நேனோ பவர் ஸ்டேனசன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஜீவன் என்ற இனியவனுக்கு நெருக்கமானவர் என போலீசார் தெரிவித்தனர். ஜீவன் சொன்னதன்பேரிலேயே இவர் இந்த கருவிகளை மடிப்பாக்கத்தில் ஒரு கடையில் வாங்கியுள்ளார்.
இவற்றை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தார். இவர் 1997ம் ஆண்டே இந்தியாவுக்கு வந்துவிட்டார். தொடர்ந்து புலிகளுக்கு உதவி வந்துள்ளார். சென்னையில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.
இன்று காலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 6 மாத காலத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள எல்டிடிஇ இயக்கத்தைச் சேர்ந்த எட்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.